மீண்டுமாக கிறிஸ்து பிறப்பு விழா வருகிறது. இயேசு குழந்தையாக நம் மத்தியில் பிறக்க போகிறார். 'தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிகொண்டார்". (யோவா.1:18)
மேலே கண்ட இறைவார்த்தைகள் உணர்த்தும் உண்மை என்ன? இயேசு கிறிஸ்து எல்லா காலத்திற்கும் இறைதந்தையோடு ஒன்றித்திருந்தவர். அவரது இறைதந்தையின் ஞானத்திலும், சிந்தையிலும் உதித்ததனால் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மனிதனானார்.
இதை உணர்ந்தவராக நற்செய்தியாளர் யோவான் தன் காலச்சூழ்நிலைக்கேற்ற தத்துவ பின்னனி வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.'வாக்கு மனிதர் ஆனார்". முடிவில்லாத வாழ்வு கொண்ட வார்த்தையானவர் குறிப்பிட்ட காலத்திற்கு மனித உருபெற்றார். நமது மனிதத்தன்மையை ஏற்று நம்மிலே ஒருவராக நம்மை மீட்டார்.
அன்பும், அமைதியும், ஆனந்தமும் தான் கிறிஸ்து பிறப்பின் உண்மை அர்த்தமாக இருக்க முடியும். அமைதியும், ஆனந்தமும் அன்பின் கனிகளே.
இவ்விழாவின் வழியில் அனைத்து குடும்பங்களும் உண்மையான அன்பும், அமைதியும், ஆனந்தமும், சமூக நீதியும் பெற்று வாழ இறைவன் ஆசீர்வதிப்பாராக.
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்;த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|